sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதடைந்த அரசு பள்ளி கட்டடம் அச்சத்தில் புதுப்பட்டு மாணவர்கள்

/

பழுதடைந்த அரசு பள்ளி கட்டடம் அச்சத்தில் புதுப்பட்டு மாணவர்கள்

பழுதடைந்த அரசு பள்ளி கட்டடம் அச்சத்தில் புதுப்பட்டு மாணவர்கள்

பழுதடைந்த அரசு பள்ளி கட்டடம் அச்சத்தில் புதுப்பட்டு மாணவர்கள்


ADDED : ஜூன் 21, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி.

இங்கு 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். போதிய கட்டடம் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மூன்று கட்டங்கள் உள்ள இந்த பள்ளியில் ஒரு கட்டம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளது.

மீதமுள்ள இரண்டு கட்டங்களில் இயங்கும் வகுப்பறைகளும் சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளது.

மழை பெய்தால் பள்ளி வகுப்பறையில் மழைநீர் வழிந்தோடுகிறது. மூன்று வகுப்பறைகளே உள்ளதால் மாணவர்கள் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் மாணவர்களின் சேர்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதா மாணவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 70 மாணவர்களே படித்து வருகின்றனர்.

மேலும் வகுப்பறை கேட்டு பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் பலமுறை மனு அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us