sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 40 அடி 10 ஆக மாறிய அவலம்

/

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 40 அடி 10 ஆக மாறிய அவலம்

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 40 அடி 10 ஆக மாறிய அவலம்

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 40 அடி 10 ஆக மாறிய அவலம்


ADDED : ஆக 14, 2024 11:11 PM

Google News

ADDED : ஆக 14, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியின் உபரி நீர், பிரித்வி நகர் எதிரே உள்ள கலங்கல் வழியாக, ஜி.என்.டி., சாலையோரம் நேராக செல்கிறது.

அது கோட்டக்கரை சந்திப்பில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள உபரி நீர் கால்வாயில், ரெட்டம்பேடு சாலை வழியாக அடுத்தடுத்து உள்ள ஏரிகளுக்கு செல்கிறது.

இதில், கோட்டக்கரை முதல் ரெட்டம்பேடு வரையிலான கால்வாயோரம், ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதனால், 40 அடி அகலம் இருக்க வேண்டிய கால்வாய், ஆக்கிரமிப்புகளால் வெகுவாக சுருங்கி, தற்போது, 10 அடி அகலம் மட்டுமே எஞ்சிஉள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளால், மழை காலங்களில் அந்த கால்வாய் வழியாக உபரி நீர் எளிதாக கடந்து செல்ல முடியாமல், அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுதும் கழிவுநீருடன் கலந்த மழைநீர் தேங்குகிறது.

இதனால் மக்களின் சுகாதாரம் மட்டுமின்றி, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. நீர்வளத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை ஆழப்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us