ADDED : மே 07, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, தில்லை கங்காநகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 67. இவர், பழைய வீட்டை இடித்து, புதிதாக வீடு கட்டி, இரண்டு மாதங்களுக்கு முன் குடியேறினார். கட்டட அனுமதியை மீறி கட்டியதாக, வடபழனியைச் சேர்ந்த தேவராஜ், மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி, மூர்த்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மூன்று நாட்களுக்குள், 3.50 லட்சம் ரூபாய் தந்தால் தான், புகாரை வாபஸ் வாங்குவேன் என, மிரட்டல் விடுத்துள்ளார். ஆதம்பாக்கம் போலீசார் தேவராஜை கைது செய்தனர்.