ADDED : ஜூன் 02, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் கிராமம், வில்லியர் காலனியில் வசித்து வந்தவர் பைரிகான், 55. இவரது மகன் செஞ்சய்யா, 30, வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இவரது தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த செஞ்சய்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். உடனே, சிகிச்சைக்காக உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.