sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பஸ்களில் அட்டகாசம் போலீசார் மெத்தனம்

/

அரசு பஸ்களில் அட்டகாசம் போலீசார் மெத்தனம்

அரசு பஸ்களில் அட்டகாசம் போலீசார் மெத்தனம்

அரசு பஸ்களில் அட்டகாசம் போலீசார் மெத்தனம்


ADDED : ஆக 23, 2024 02:45 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி தாலுகா, அருங்குளம், மாமண்டூர், வேலஞ்சேரி, நல்லாட்டூர், மத்துார், முருக்கம்பட்டு, புச்சிரெட்டிப் பள்ளி உள்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உயர்கல்வி கற்பதற்காக தினமும், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அரசு பேருந்துகள் மூலம் வந்து செல்கின்றனர்.

காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படும் டி.71, டி7, டி.45, 97இ, டி.65, டி.48, டி.63 ஆகிய அரசு பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

பேருந்தில் போதிய இடவசதி இருந்தாலும், சில மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக, கடந்த, 20 நாட்களாக மாணவர்கள் அரசு பேருந்துகளில் செய்யும் அட்டகாசத்தால், பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் தினமும் பரிதவித்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் பேருந்துகளில் மாணவர்கள் ஜன்னல் கம்பிகள் மீது ஏறுவதால் கம்பிகள் சேதமடைந்து வருகிறது.

அரசு பேருந்துகளில் மாணவர்கள் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை போலீசார் பார்த்தும் கண்டும், காணாமல் உள்ளனர்.

எனவே மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் ஆய்வு செய்து, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us