sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபர் கொலை வழக்கு சிகிச்சை பெற்றவரும் உயிரிழப்பு

/

வாலிபர் கொலை வழக்கு சிகிச்சை பெற்றவரும் உயிரிழப்பு

வாலிபர் கொலை வழக்கு சிகிச்சை பெற்றவரும் உயிரிழப்பு

வாலிபர் கொலை வழக்கு சிகிச்சை பெற்றவரும் உயிரிழப்பு


ADDED : ஜூன் 04, 2024 06:28 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார், : கடம்பத்துார் ஒன்றியம் மணவாளநகர், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் துரை என்பவரது மகன் சதீஷ், 27. இவரது சகோதரி ராஜேஸ்வரி.

துாய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரிக்கும், உடன் பணிபுரியும் லட்சுமி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. தன் சகோதரி ராஜேஸ்வரிக்கு ஆதரவாக, சதீஷ் பேசி வந்துள்ளார்.

கடந்த 30ம் தேதி இரவு வெங்கத்துார் ஏரிக்கரை பகுதியில், தன் நண்பர் முரளி, 27, என்பவருடன் சதீஷ் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, லட்சுமியின் மகன்களான சூர்யா, 18, தினேஷ், 19, மற்றும் 17 வயது மகன், இவர்களின் நண்பர்களான அஜீத், 23, அபி, 23, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, சதீஷை வெட்டி கொலை செய்தனர்.

தடுக்க வந்த முரளிக்கும் வெட்டு விழுந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முரளி, மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் லட்சுமி, சூர்யா, தினேஷ், அஜீத், அபி மற்றும் இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேரையும் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவர்கள் இருவரை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற ஐந்து பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.

இந்நிலையில், சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முரளி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us