sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமண ஏற்பாடுகள் தடபுடல் கடைசி நேரத்தில் மணமகன் ஓட்டம்

/

திருமண ஏற்பாடுகள் தடபுடல் கடைசி நேரத்தில் மணமகன் ஓட்டம்

திருமண ஏற்பாடுகள் தடபுடல் கடைசி நேரத்தில் மணமகன் ஓட்டம்

திருமண ஏற்பாடுகள் தடபுடல் கடைசி நேரத்தில் மணமகன் ஓட்டம்


ADDED : செப் 15, 2024 11:17 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ஸ்ரீதர், 29. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கும்பகோணம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் அனுஷா, 29. இவரும் அதே வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வேறு, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணம் செய்ய முடிவு செய்து, திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.

நேற்று காலை, 7:30 மணியளவில் திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி அதே மண்டபத்தில் நடந்தது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து மணமகன் ஸ்ரீதர் தன் அறையில் ஓய்வு எடுக்க சென்றார்.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மணமகள் வீட்டார் திருமண முகூர்த்தத்திற்கு தயாராக வந்த போது, மணமகன் ஸ்ரீதர் திடீரென மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருமணம் நின்றது.

மணமகள் அனுஷா திருத்தணி போலீஸ் நிலையத்தில், 'மணமகன் திடீரென மாயமானதில் சந்தேகம் உள்ளது. நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்ததால், மணமகனை வேண்டும் என்றே, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறைத்து வைத்துள்ளனர் என, புகாரில் தெரிவித்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us