/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு
ADDED : மே 10, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, மம்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சங்கர், 49. தனியார் தொழிற்கூட உதவியாளர். இவரது மனைவி பழ வியாபாரி. இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர்.
மதிய நேரத்தில் வீட்டின் கதவு திறந்து இருப்பதாக பக்கத்து வீட்டினர் தகவல் அளித்தனர். இடைப்பட்ட நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 7 சவரன் நகை, 350 கிராம் வெள்ளி கொலுசு, 20,000 ரூபாய் ஆகியவற்றை திருடினர்.
வீட்டின் வாசலில் மிளகாய் பொடியை துாவி சென்றனர். இதுகுறித்த புகார்படி வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.