sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரோடு ரோலர் திருடிய மூன்று பேருக்கு 'காப்பு'

/

ரோடு ரோலர் திருடிய மூன்று பேருக்கு 'காப்பு'

ரோடு ரோலர் திருடிய மூன்று பேருக்கு 'காப்பு'

ரோடு ரோலர் திருடிய மூன்று பேருக்கு 'காப்பு'


ADDED : பிப் 26, 2025 07:04 PM

Google News

ADDED : பிப் 26, 2025 07:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன், 31. இவர், சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரோடு ரோலர், மூன்று தினங்களுக்கு முன், மீஞ்சூர் பகுதியில் சாலை பணிகளுக்கு கொண்டு வரப்பட்டது. பணிகள் முடிந்து, வாகனத்தை சென்னைக்கு கொண்டு செல்லும்போது பழுதானது.

அதையடுத்து அதன் டிரைவர், சோழவரம் அடுத்த, நல்லுார் டோல்கேட் பகுதியில் ரோடு ரோலர் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.

கடந்த 24ம் தேதி மாலை, வாகனத்தை சரி செய்து கொண்டு செல்வதற்காக தினகரன், டிரைவர் மற்றும் மெக்கானிக்குடன் வந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரை காணவில்லை.

இது குறித்து சோழவரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்படி, சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், 34, கோபிநாத், 52, வெங்கடேசன், 34, ஆகியோர், 'எய்ச்சர்' லாரியில் வைத்து, ரோடு ரோலரை திருடி சென்றது தெரிந்தது. அதையடுத்து போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us