sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளி கொலை மூன்று௴ பேர் கைது

/

தொழிலாளி கொலை மூன்று௴ பேர் கைது

தொழிலாளி கொலை மூன்று௴ பேர் கைது

தொழிலாளி கொலை மூன்று௴ பேர் கைது


ADDED : ஜூலை 17, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம், சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், அரக்கோணம் அடுத்த ஓச்சலம் பகுதியில் உள்ளது.

இங்கு பெரம்பூரை சேர்ந்த சிட்டிபாபு, 60, என்பவர் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சிட்டிபாபு தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த தசரதன், 52, திண்டிவனம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் 26, ரவி, 42, ஆகிய மூவருக்கும், சிட்டிபாபுவுக்கும் பணம் கொடுத்து வாங்குவதில் பிரச்னை இருந்துள்ளது.

கடந்த 14ம் தேதி இரவு மூவரும் மதுபோதையில் வந்து, சிட்டிபாபுவை இரும்பு ராடால் தாக்கியதில் அவர் இறந்தது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us