ADDED : மார் 05, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அண்ணா சாலை, பின்னி லிங் சாலையில் தருக்குமார், 52, என்பவர், 10 ஆண்டுகளாக 'கமலா டயர்ஸ்' என்ற பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இங்கு, விகேந்திரா, 31, தல்வான், 24, சுனில் குமார்,37, ஆகிய மூவரும் பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம்நள்ளிரவு, லாரி டயருக்கு மூவரும், காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அதிக அழுத்தத்தால் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் காயமடைந்த மூவரும், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.