sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது

/

இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது

இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது

இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது


ADDED : ஆக 21, 2024 11:07 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, அரசு பேருந்து தடம் எண். 34, கள்ளூர் நோக்கி புறப்பட்டது.

பொன்னேரி - பழவேற்காடு சாலை வழியாக சின்னகாவணம் கிராமத்தின் அருகே செல்லும்போது, மர்மநபர்கள் பேருந்து மீது கற்களை வீசி முன் மற்றும் பின்புற கண்ணாடிகளை உடைத்தனர்.

பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் பேருந்தில் இருந்த பயணியர் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு, பயணியருடன் அது கள்ளூர் நோக்கி புறப்பட்டது.

அங்கிருந்து, சிறிது துாரம் சென்ற நிலையில், மீண்டும் மர்ம கும்பல் அந்த பேருந்து மீதும் கற்களை வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன.

இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணியர் செய்வதறியாது திகைத்து நின்றனர். தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி பணிமனையில் இருந்து மீண்டும் ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு, காத்திருந்த பயணியரை பாதுகாப்புடன் கள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சின்னகாவணம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், 23, துாயவன், 23 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us