/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஆக 21, 2024 09:27 PM
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பால சுப்பிரமணியரை தவிர, இங்குள்ள அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ள-மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடத்தப்படும். இந்தாண்டு, 12வது திருக்கல்யாண உற்சவம் செப்.,1ல் நடக்கிறது.
அன்று காலை 6:00 மணி முதல் விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் அபிஷேகம் நடக்கிறது.
இதை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு மூவலருக்கு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வள்ளி மணவாளருக்கு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. நண்பகல் திருக்கைலாய வாத்தியங்களுடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகதவர்கள், திருக்கல்யாண சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கலாம்.