/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணிகை திருப்புகழ் பாராயணம்
/
திருத்தணிகை திருப்புகழ் பாராயணம்
ADDED : ஆக 18, 2024 01:40 AM

திருத்தணி:திருத்தணியில் தனியார் திருமண மண்டபத்தில், ஆடிட்டர் அருளிசைமணி மெய்யப்பன் மற்றும் அலமேலு தம்பதி பயிற்றுவித்து வழி நடத்தும் திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழு சார்பில் நேற்று காலை, 8:00 மணிக்கு திருப்புகழ், 108 மணி மாலை, திருத்தணிகை திருப்புகழ் பாராயண நிகழ்ச்சிநடந்தது.
இதில், முருகன் பக்தி பாடல்கள் மற்றும், 108 முறை பாராயணம் பாடப்பட்டது. மதியம், வேல் மாறல், வேல் மயில் சேவல் விருத்தம் பாராயணம் பாடப்பட்டது.
தொடர்ந்து வேல் பூஜை நடத்தி, பக்தர்கள் நடைபயணமாக திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சென்று மூலவர், வள்ளி, தெய்வானை, உற்சவர்கள் சண்முகர். முருகர் ஆகிய சன்னிதிகளில் வேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டனர்.

