sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடுகாடு ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்

/

தொடுகாடு ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்

தொடுகாடு ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்

தொடுகாடு ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்


ADDED : செப் 06, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன், 44 என்பவர் பதவி வகித்து வந்தார்.

இவர் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையில் இருந்து பல்வேறு நிகழ்வுகளில் தவறி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தி அரசு சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணமாகியுள்ளது.

அவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)ல் ஊராட்சிகள் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கடந்த 3ம் தேதி, பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us