sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல் இருவருக்கு சிறை தண்டனை

/

சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல் இருவருக்கு சிறை தண்டனை

சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல் இருவருக்கு சிறை தண்டனை

சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல் இருவருக்கு சிறை தண்டனை


ADDED : மார் 29, 2024 09:07 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் தாயை இழந்த 9 வயது சிறுமி, தன் அத்தையுடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஜன., 19ம் தேதி, சிறுமி பக்கத்து வீட்டில் 'டிவி' பார்க்கசென்றுள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் வசிக்கும் ரவி, 51, என்பவர், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து விசாரித்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசார், ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், ரவிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என தீர்ப்பளித்தார்.

ஆயுள் தண்டனை


l எம்.கே.பி., நகர் பகுதியில் வசித்து வந்த மனநலம் குன்றிய 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, கொடுங்கையூரைச் சேர்ந்த ஷைன்ஷா, 38, என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us