sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை மாத்திரை கடத்திய மேலும் இருவர் கைது

/

போதை மாத்திரை கடத்திய மேலும் இருவர் கைது

போதை மாத்திரை கடத்திய மேலும் இருவர் கைது

போதை மாத்திரை கடத்திய மேலும் இருவர் கைது

1


ADDED : மே 31, 2024 02:47 AM

Google News

ADDED : மே 31, 2024 02:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, :மும்பையில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா, புத்துார் நகரி, திருத்தணி வழியாக சென்னை நகருக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின்படி ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது இரண்டு வாலிபர்கள் ரயில் நிலையத்தில் பையுடன் உட்கார்ந்திருந்ததை கண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பிடிப்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் மதிப்பு, 3 லட்சத்து 67 ஆயிரத்து, 500 ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகள் கடத்தி வந்தவர்கள் சென்னை கண்ணகிநகரை சேர்ந்த யுவராஜ், 27, நீலாங்கரையை சேர்ந்த மோகன், 24 என தெரிய வந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் திருத்தணி ரயில் நிலையத்தில் திருத்தணி போலீசார் போதை மாத்திரைகள் கடத்தி வந்த நால்வரில் இருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us