sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டுமனை பட்டா கேட்டு கிராமவாசிகள் போராட்டம்

/

வீட்டுமனை பட்டா கேட்டு கிராமவாசிகள் போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு கிராமவாசிகள் போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு கிராமவாசிகள் போராட்டம்


ADDED : ஜூலை 23, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராமவாசிகள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, நேற்று பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், அழைத்து பேச்சு நடத்தினார். அவரிடம் பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, கிராமவாசிகள் முறையிட்டனர். இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

மனுவில் 'கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், பொன்னேரி ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டர் என தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது ஒரே வீட்டில், மூன்று தம்பதியர் வசிக்கும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சேதம் அடைந்த வீடுகளில் தங்க முடியாமல், அரசு கட்டடங்களில் தஞ்சமடைய வேண்டி உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுப்புநடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் - கலெக்டர் உறுதியளித்தார். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us