sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு குடியிருப்புவாசிகள் போராட்டம்

/

புதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு குடியிருப்புவாசிகள் போராட்டம்

புதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு குடியிருப்புவாசிகள் போராட்டம்

புதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு குடியிருப்புவாசிகள் போராட்டம்


ADDED : மே 09, 2024 01:14 AM

Google News

ADDED : மே 09, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் மேற்கு பகுதியில், கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீருக்காக குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், குடியிருப்புவாசிகள் சீரான குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வல்லுார் - எண்ணுார் துறைமுக சாலையில் குவிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.

இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாகவும், தற்காலிகமாக டிராக்டர்களில் வினியோகிக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று முன்தினம் அத்திப்பட்டு புதுநகர் கிழக்கு பகுதி குடியிருப்புவாசிகள் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி, மேற்கு பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவைகளை சீராக வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us