/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வாய்கண்டிகையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறப்பு
/
தேர்வாய்கண்டிகையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறப்பு
தேர்வாய்கண்டிகையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறப்பு
தேர்வாய்கண்டிகையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 24, 2025 01:46 AM

ஊத்துக்கோட்டை,:சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக போடப்பட்ட கிருஷ்ண நதிநீர் ஒப்பந்தத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக தமிழகத்தின் ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு பெறப்பட்டு வருகிறது.
கிருஷ்ணா நீர் வரத்து மற்றும் மழைநீரால் பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் நிறைந்து உள்ளது. இதுதவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட நீர்த்தேக்கத்திலும் தண்ணீர் உள்ளது.
தற்போது சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 250 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல், 85 கன அடியாக குறைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது.
நேற்று காலை முதல், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு, 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் சாய்கங்கை கால்வாயில் வழியே அனுப்பி வைக்கப்பட்டு, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.

