/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் போலீஸ் 'பூத்' மீண்டும் செயல்படுமா?
/
கிடப்பில் போலீஸ் 'பூத்' மீண்டும் செயல்படுமா?
ADDED : மார் 10, 2025 11:54 PM

கும்மிடிப்பூண்டி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லை துவங்கும் இடமான எளாவூர் பகுதியில், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அங்கிருந்து பிரியும் ஏடூர் கிராம சாலை வழியாக, ஆந்திரா செல்ல முடியும்.
தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கடத்தல் சம்பவவங்களில் ஈடுபடுவோர், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை தவிர்த்து, ஏடூர் சாலை வழியாக சென்றுவர வாய்ப்புள்ளது.
அதை தடுக்கும்நோக்கில், சோதனைச் சாவடி திறந்த போதே, ஏடூர் சாலை நுழைவாயிலில், போலீஸ் 'பூத்' ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகள் முன் வரை அந்த போலீஸ் 'பூத்' பயன்பாட்டில் இருந்தது. அதில்,24 மணி நேரமும்,சுழற்சி முறையில்போலீசார் கண்காணித்து வந்தனர்.
அதன்பின், போலீஸ் 'பூத்' சிதிலமடைய துவங்கி எலும்புக்கூடாக மாறியது. தற்போது, அதே இடத்தில், ஓரமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாற்று வழியில் கடத்தல் சம்பவங்கள் நடப்பதை தடுக்க, மீண்டும் அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய போலீஸ் 'பூத்' ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.
அதில், சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.