/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
ADDED : ஆக 30, 2024 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே சூரப்பூண்டியை சேர்ந்தவர் பிரேமலதா, 32. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள குடிநீர் மின் மோட்டரை இயக்கும் போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சுயநினைவு இழந்தார்.
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் பாய்ந்த போது அருகில் இருந்த அவரது எட்டு வயது மகனுக்கு சிறு காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.