sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி

/

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி


ADDED : செப் 07, 2024 07:27 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் மூன்று கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 21- அக்.6 வரை, மாநில அளவிலான கண்காட்சி, அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை- 34 என்ற முகவரியில் நடக்கிறது.

இக்கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்று தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி, விற்பனை செய்யலாம்.

மேலும் மகளிர் சுய உதவி குழுவினர் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களுக்கும், அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் உற்பத்தி குழுவினர் வரும் 10க்குள், https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 -- -27664528, 97873 68726 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us