sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'டோல்கேட்' சந்திப்பில் 'ரவுண்டானா' சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

/

'டோல்கேட்' சந்திப்பில் 'ரவுண்டானா' சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

'டோல்கேட்' சந்திப்பில் 'ரவுண்டானா' சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

'டோல்கேட்' சந்திப்பில் 'ரவுண்டானா' சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்


ADDED : பிப் 25, 2025 12:00 AM

Google News

ADDED : பிப் 25, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், 'டோல்கேட்' நான்கு சாலை சந்திப்பில் 'ரவுண்டானா' அமைத்து, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், ஆவடி பகுதியில் இருந்து, திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன.

கலெக்டர் அலுவலகம் அருகில், 'டோல்கேட்' அருகில், நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது.

அங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டை, இடதுபுறம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் சாலை பிரிகிறது. அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலை குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 'டோல்கேட்' சாலை சந்திப்பில் 'ரவுண்டானா' அமைத்து, நான்கு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலை மற்றும் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஊத்துக்கோட்டை சாலை சந்திக்கும் இடமாக 'டோல்கேட்' உள்ளது. அந்த இடத்தில், நான்கு சாலை பிரியும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அந்த நிலையில், மருத்துவக்கல்லுாரி மற்றும் ஊத்துக்கோட்டை சாலையில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அப்பணி முடிந்ததும், நான்கு சாலைகளிலும், 'டிவைடர்' அமைத்து, நடுவில் 'ரவுண்டானா' அமைக்கப்படும்.

மேலும், நான்கு வழியிலும், சாலை அகலப்படுத்தப்பட்டு, வாகனங்கள் எளிதாக திரும்பும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும். இதனால், 'டோல்கேட்' சந்திப்பில் நெரிசல் குறையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us