ADDED : ஆக 04, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 21.
கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வசித்தபடி சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். நேற்று காலை, டூ-வீலரில் சென்ற அவர், பெட்ரோல் போடுவதற்காக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு திரும்ப முயன்றார். அப்போது லாரி ஒன்று மோதியதில் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.