sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆவடியில் 20 கிலோ நாட்டு வெடி அழிப்பு

/

ஆவடியில் 20 கிலோ நாட்டு வெடி அழிப்பு

ஆவடியில் 20 கிலோ நாட்டு வெடி அழிப்பு

ஆவடியில் 20 கிலோ நாட்டு வெடி அழிப்பு


ADDED : நவ 10, 2025 11:02 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: பட்டாபிராமில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 20 கிலோ நாட்டு வெடியை, நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் நேற்று அழித்தனர்.

ஆ வடி அடுத்த பட்டாபிராம், தேவராஜபுரத்தை சேர்ந்தவர் குமார், 48. இவர், திருவள்ளூர் மாவட்டம், கோமக்கம்பேடு பகுதியில் உரிமம் பெற்று நாட்டு வெடி விற்பனை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையின் போது, 15 முதல் 20 கிலோ நாட்டு வெடி, வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி, பட்டாபிராம், தண்டுரை, விவசாய தெருவில், விஜயன் என்பவரிடம், நாட்டு வெடி வாங்க வந்த போது, எதிர்பாராத விதமாக நாட்டு வெடி வெடித்து, நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், கடந்த 21ம் தேதி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடியை, யாருக்கும் தெரியாமல் கடைக்கு எடுத்துச் சென்றார். தகவலறிந்த பட்டாபிராம் போலீசார், அவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த நாட்டு வெடியை பறிமுதல் செய்தனர். போலீசை கண்டதும், குமார் தப்பியோடி தலைமறைவாக உள்ளார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, பி.டி.டி.எஸ்., இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார், குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, 16 வகையான 20 கிலோ நாட்டு வெடியை, அன்னம்பேடு, மாப்பிள்ளை சேம்பரில் ஐந்து அடி பள்ளத்தில் கொட்டி, டீசல் ஊற்றி நேற்று அழித்தனர்.






      Dinamalar
      Follow us