sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு

/

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு


ADDED : டிச 22, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நேற்று காலை, மதுரையைச் சேர்ந்த, ஓம் நந்தியெம்பெருமான் உழவாரப் பணிக் குழுவைச் சேர்ந்த, 20வினர் வந்தனர். இவர்கள் பித்தளை கம்பிகள், கதவு, சுவாமி பீடம், விளக்குகள் மற்றும் எண்ணெய் கழிவுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கொடிமரம், வள்ளி, தெய்வானை, சண்முகர். ஆபத்சகாய விநாயகர், உற்சவர் மற்றும் மூலவர் நுழைவு கதவு, கோவில் நுழைவு கதவு ஆகிய இடங்களில் உள்ள பித்தளை கதவு, வரிசை கம்பிகள் போன்ற பித்தளை சம்பந்தமான பொருட்களை சுத்தம் செய்தனர். மேலும், எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்தும், விளக்குகளை துாய்மைப்படுத்தினர்.

இது குறித்து, ஓம் நந்தியெம்பெருமான் உழவாரப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் அசோகன் கூறியதாவது:

எங்கள் குழுவில், 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அனைவரும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறோம். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசு விடுமுறை நாளில் ஒரு நாள், ஒரு கோவில் என தேர்வு செய்து, சுத்தம் செய்யும் உழவார பணிகள் இலவசமாக செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் நேற்று, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து சுத்தம் செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us