sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

21,500 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

/

21,500 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

21,500 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

21,500 ஏக்கர் பயிர்கள் மூழ்கின


ADDED : அக் 16, 2024 07:30 PM

Google News

ADDED : அக் 16, 2024 07:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது. 14 ஒன்றியங்களில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின.

இதில் 21 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. மூழ்கிய பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகபட்சமாக மீஞ்சூர் ஒன்றியத்தில் 8,750 ஏக்கர், கும்மிடிப்பூண்டியில் 5,000 ஏக்கர், சோழாவரம் பகுதியில் 3,750 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மொத்தம் 21 ஆயிரத்து 500 ஏக்கரின் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

விளைநிலங்களில் தண்ணீர் வடிந்த பின் சேதமடைந்த பயிர்கள் குறித்து தெரிய வரும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகள் உள்ளன. இதில், 75 சதவீதம்-22, 50 சதவீதம்-81, 25 சதவீதம்-152, அதற்கு கீழ் 326 ஏரிகள் நிரம்பி உள்ளன.

மேலும், 3,296 குளம், ஊரணிகளில், 23, நுாறு சதவீம் நிரம்பி உள்ளது. 75 சதவீதம்-75, 50 சதவீதம்-568, 25 சதவீதம்-1,356, அதற்கு கீழ், 1,194 நிரம்பி உள்ளன. இதில், 80 குளம், ஊரணிகளுக்கு நீர்வரத்து இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.






      Dinamalar
      Follow us