sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஷீரடி சாய்பாபா கோவிலின் 22ம் ஆண்டு விழா

/

ஷீரடி சாய்பாபா கோவிலின் 22ம் ஆண்டு விழா

ஷீரடி சாய்பாபா கோவிலின் 22ம் ஆண்டு விழா

ஷீரடி சாய்பாபா கோவிலின் 22ம் ஆண்டு விழா


ADDED : பிப் 06, 2025 01:22 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,:திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின், 22ம் ஆண்டு, உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது.

காலை 9:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு கலசநீர் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மதியம் 2:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ஓம் சாய், ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய் நாம பஜனைக் குழுவினரால் பாடப்பட்டது.

முன்னதாக, அதிகாலையில், காகட ஆரத்தி மற்றும் அபிஷேகம், மூலவருக்கு நடந்தது என்பது குறிப்பிடதக்கது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய்சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us