/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் திருட்டு
ADDED : ஜன 01, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன், 74; இம்மாதம், 25ம் தேதி, வீட்டை பூட்டிக் கொண்டு ஆவடியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது, முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இடைப்பட்ட நாட்களில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த, மூன்று சவரன் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

