sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடர் மின்வெட்டு எதிரொலி 30 கிராமவாசிகள் அவஸ்தை

/

தொடர் மின்வெட்டு எதிரொலி 30 கிராமவாசிகள் அவஸ்தை

தொடர் மின்வெட்டு எதிரொலி 30 கிராமவாசிகள் அவஸ்தை

தொடர் மின்வெட்டு எதிரொலி 30 கிராமவாசிகள் அவஸ்தை


ADDED : மே 05, 2025 11:59 PM

Google News

ADDED : மே 05, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு,

திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம், நெடும்பரம், கனகம்மாசத்திரம், கூளூர், காஞ்சிப்பாடி, ராமஞ்சேரி, குண்ணவலம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், நேற்று முன்தினம் மதியம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குறைந்த மின்னழுத்தம் வினியோகிக்கப்படுவதால் வீடுகளில் லைட், மின்விசிறி போன்ற அத்தியாவசிய சாதனங்கள் இயங்கவில்லை. தொடர்ந்து, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. கடும் வெயில் தாக்கம் காரணமாக புழுக்கம் தாங்க முடியாமல், குழந்தைகள், பெரியவர்கள் துாங்க முடியாமல் சிரமப்படுவதாக கிராமவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மின்வாரிய அதிகாரி கூறியதாவது:

நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர் மின்வெட்டால் கிராமவாசிகள் பாதிக்காமல் இருக்க, மின் சப்ளை மாற்றி வழங்கி வருகிறோம். சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் சீரான மின் வினியோகம் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us