/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் வலியுறுத்தல்
/
ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் வலியுறுத்தல்
ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் வலியுறுத்தல்
ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 20, 2025 10:36 PM
திருவாலங்காடு:சின்னம்மாபேட்டையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியைச் சுற்றி அரிசந்திராபுரம், தொழுதாவூர், பெரியகளக்காட்டூர், பாகசாலை உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், 50,000க் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் மருத்துவ தேவைக்கு, 5 - 13 கி.மீ., துாரமுள்ளதிருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருகின்றனர்.
இதற்கு, ஒரு ஆம்புலன்ஸ் சேவை மட்டுமே உள்ளது. இதனால், தொலைவில் உள்ள மக்கள் அவசர சிகிச்சைக்கு, நோயாளிகளை அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
பிரசவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சையின்போது, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளது.
அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும்போது திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், அரக்கோணம், பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து வர காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால், முறையான சிகிச்சை அளிக்க முடியாமல், நோயாளிகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, 30 கிராமங்களுக்கு மையப்பகுதியான சின்னம்மாபேட்டையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.