/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு
/
ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு
ADDED : ஜூன் 02, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் :திருவள்ளூர் அடுத்த ஈக்காடு மகாலட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் சோமசேகரன், 55. இவரது மனைவி ராதா, 52; இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். கடந்த 29ம் தேதி தங்களது சொந்த கிராமமான நாகலாபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றனர்.
நேற்று முன்தினம் மதியம், சோமசேகரன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் செயின் மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசு திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.