sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'

/

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'


ADDED : செப் 26, 2024 05:56 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சித்ரா, 25. இவர். கற்பூரவள்ளி சுயஉதவி குழுவில் உறுப்பினராக உள்ளார்.

நேற்று மதியம் சித்ரா திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று, கடனாக 40,000 ரூபாய் குழு கணக்கில் இருந்து பெற்றார்.

பின், பணத்தை தன் கைப்பையில் வைத்துக் கொண்டு, பூ மார்க்கெட் காந்தி சிலை அருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, சித்ராவை அருகே பெண் ஒருவரும் நின்றிருந்தார்.

பேருந்து வந்தவுடன் சித்ரா பேருந்தில் ஏறி புறப்பட்டார். சிறிது துாரம் சென்றவுடன், தனது கைபையை பார்த்த போது, 40,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us