தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி

திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி

திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி


ADDED : பிப் 01, 2024 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 15வது மாநில நிதிக்குழு, 2024 - 25ம் ஆண்டு திட்டத்தின் மூலம், புதியதாக தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, சுகாதார வளாகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒன்றியத்தில், 15வது மாநில நிதிக்குழு மூலம், அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, 4.50 கோடி ரூபாய் திட்டமதிப்பு தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம்.

அதாவது ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை திட்டமதிப்பு தயாரித்துள்ளோம்.

நிதியுதவி கிடைத்ததும், மூன்று மாதங்களில் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us