/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4வது புத்தக கண்காட்சி: 'லோகோ' வெளியீடு
/
4வது புத்தக கண்காட்சி: 'லோகோ' வெளியீடு
ADDED : பிப் 11, 2026 05:15 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நான்காவது புத்தக கண்காட்சிக்கான 'லோகோ'வை, அமைச்சர் வெளியிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், புத்தக கண்காட்சி மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், நான்காவது புத்தக கண்காட்சி, வரும் 13ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 'என் ஊர்; என் கனவு' திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் முன்னிலையில், அமைச்சர் நாசர், நான்காவது புத்தக கண்காட்சிக்கான, 'லோகோவை' வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், எம்.எல். ஏ.,க்கள் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

