/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுரவாயல் கூவத்தில் 2 மேம்பாலங்கள் 50 சதவீத பணிகள் நிறைவு
/
மதுரவாயல் கூவத்தில் 2 மேம்பாலங்கள் 50 சதவீத பணிகள் நிறைவு
மதுரவாயல் கூவத்தில் 2 மேம்பாலங்கள் 50 சதவீத பணிகள் நிறைவு
மதுரவாயல் கூவத்தில் 2 மேம்பாலங்கள் 50 சதவீத பணிகள் நிறைவு
ADDED : பிப் 03, 2025 02:20 AM

சென்னை:மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே, திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தரைப்பாலங்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு மழைக்காலத்திலும், கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தரைப்பாலங்கள் மூழ்கி, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.
சென்னையில், கடந்த 2022ம் ஆண்டு, நவம்பர்,- டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலங்கள் மூழ்கின.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். கடந்த நவ., டிச., மாதம் பெய்த மழையிலும் தரைப்பாலங்கள் மூழ்கின.
மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், இரண்டு இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.
அதன்படி, நொளம்பூர் யூனியன் சாலை -- சன்னதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை இணைக்கும் வகையில், 31.65 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
அதேபோல், சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 42.71 கோடி ரூபாய் மதிப்பில், மற்றொரு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதில், சின்னநொளம்பூரை இணைக்கும் மேம்பால பணிகள் நடக்கும் இடம் வழியாக, 230 கிலோ வாட்ஸ் மின் வடம் செல்கிறது. இந்த மின் வடத்தை மாற்றி அமைக்க, மின் வாரியத்திற்கு, 2.5 கோடி ரூபாய் கட்டடப்பட்டது.
மின் வடங்கள் மாற்றி அமைக்க தாமதம் ஏற்பட்டதால், மேம்பாலம் கட்டும் பணி மந்தமானது. தற்போது, அப்பணிகள் முடிந்து, மேம்பால பணிகள் வேகமெடுத்துள்ளன.
அதேபோல், நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னதி முதல் குறுக்கு தெரு வழியாக அமைய உள்ள மேம்பால பணிகள், நிலம் கையகப்படுத்தலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது.
தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இரு மேம்பால பணிகளும், 50 சதவீதம் முடிந்துள்ளதாகவும், அடுத்த மழைக்காலத்திற்கு முன் மேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

