/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தக்காளி வரத்து அதிகரிப்பால் 6 கிலோ ரூ.100 விற்பனை
/
தக்காளி வரத்து அதிகரிப்பால் 6 கிலோ ரூ.100 விற்பனை
ADDED : ஜன 05, 2025 10:35 PM

திருவள்ளூர்:தினமும் அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
சில நாட்கள் முன், 1 கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைவால் விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் கூறி இருந்தனர்.
இந்நிலையில், வரத்து அதிகரிப்பால், தற்போது, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி, 15 - 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதேநேரம், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 30 - 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று, திருவள்ளூர் பகுதியில், சரக்கு வாகனங்களில், 4 கிலோ தக்காளி 50 ரூபாய் மற்றும் 6 கிலோ தக்காளி 100 ரூபாய் என, போர்டு வைத்து போட்டி போட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை பகுதிவாசிகள் மற்றும் சாலையில் செல்வோர் அதிகளவில் வாங்கி சென்றனர்.

