ADDED : அக் 29, 2025 09:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பகுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகம் படும்படி நின்ற இரு இளைஞர்களிடம் இருந்த 600 போதை மாத்திரைகள் சிக்கின.
விசாரணையில், சென்னை சிந்தாதரிப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன், 26, சுதேஷ், 20, என்பதும், மும்பையில் இருந்து மாத்திரைகள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

