/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தம்பி மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
/
தம்பி மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : அக் 19, 2024 07:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சி பரேஸ்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி கீதா 45. இவருக்கும் அவரது கணவரின் அண்ணன் பக்தவச்சலம் என்பவருக்கும் ஓராண்டாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று காலை கீதாவின் வீட்டிற்கு வந்த பக்தவச்சலம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கீதாவை தாக்கியுள்ளார். இதில் இடது பக்க கண்ணில் பலத்த காயமடைந்தவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.