/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் விழுந்த மேஸ்திரி உயிரிழப்பு
/
கால்வாயில் விழுந்த மேஸ்திரி உயிரிழப்பு
ADDED : ஏப் 19, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி காட்ராயகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன், 45; கட்டட மேஸ்திரி. இவர், கடந்த 11ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு, இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாதவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.