/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : அக் 09, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், இன்று நடக்கும் என, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடக்கிறது.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.