/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'மொபைல்' போனில் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி
/
'மொபைல்' போனில் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி
'மொபைல்' போனில் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி
'மொபைல்' போனில் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி
ADDED : அக் 23, 2024 07:35 PM
திருவள்ளூர்:விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 'மொபைல்' போனில் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகள் இரவு மற்றும் மழை காலத்தில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, பாம்பு, விஷ பூச்சி கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதித்து வருகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், தங்கள் பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி வேளாண் பொறியியல் துறை வாயிலாக, மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், படிங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.