/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாப்பாட்டிற்கு மோதிய கைதிகளால் சலசலப்பு
/
சாப்பாட்டிற்கு மோதிய கைதிகளால் சலசலப்பு
ADDED : ஜன 30, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் மத்திய விசாரணை சிறையில், நேற்று முன்தினம் மதியம் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதான ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் பஞ்சாட்சரம், 28, மற்றும் மதுரவாயலை சேர்ந்த மூர்த்தி, 23, ஆகியோருக்கு இடையே, யார் தகராறு ஏற்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ் பஞ்சாட்சரம், மூர்த்தியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.
இதில், மூர்த்திக்கு பற்கள் உடைந்தன. தகவல் அறிந்து அங்கு வந்த சிறை காவலர்கள், மூர்த்தியை சிறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால், சிறையில் சலசலப்பானது.