/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர் சூழ்ந்த நிழற்குடை பயணியர் அவதி
/
புதர் சூழ்ந்த நிழற்குடை பயணியர் அவதி
ADDED : செப் 21, 2024 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது ஆற்காடு குப்பம் கிராமம். இப்பகுதி மக்கள் சென்னை , திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
சில மாதங்களாக பேருந்து நிழற்குடை உரிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் ஆங்காங்கே புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பயணியர் மாணவ - மாணவியர் அச்சப்படுகின்றனர்.
எனவே இந்த நிழற்குடையை சூழ்ந்துள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.