ADDED : பிப் 23, 2024 07:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் நிதிஷ், 23. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த 21ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நேற்று முன்தினம் இவரது தாய் அமுல் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.