நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகள் உமாமகேஸ்வரி, 28. இவர், கடந்த 21ம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் ஜெகதாம்பிகை கொடுத்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.