ADDED : மே 14, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் திருத்தணி- - சித்தூர் சாலையில், செருக்கனூர் கூட்டுச்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, செருக்கனூரைச் சேர்ந்த சாய்குமார், 23, என்பவரை கைது செய்தனர்.