/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
/
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
ADDED : ஏப் 29, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு மதுபானம் கடத்தி செல்வதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த வழியாக 'பஜாஜ் பல்சர்' வாகனத்தில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். இதில், 30 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது தெரியவந்தது.
விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கிழக்கு மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, 34, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

