sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடம்பத்துாரில் அத்திமரத் தோட்டம் 'அம்போ'

/

கடம்பத்துாரில் அத்திமரத் தோட்டம் 'அம்போ'

கடம்பத்துாரில் அத்திமரத் தோட்டம் 'அம்போ'

கடம்பத்துாரில் அத்திமரத் தோட்டம் 'அம்போ'


ADDED : டிச 22, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், 8 ஆண்டுகளில் அதிக விளைச்சல் தரும் உயர்ந்த ரக அத்தி மரம் நடும் பணி, 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்டது.

அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அத்தி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட அத்திமரக்கன்றுகள் நடப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் போதிய பராமரிப்பில்லாததால் அத்திமரக் கன்றுகள் வைக்கப்பட்ட சுவடே தெரியாமல் வீணாகி போயுள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அலட்சிய போக்கே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுமாவிலங்கை ஊராட்சியில் ஆய்வு செயது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதுமாவிலங்கை ஊராட்சியில் அத்திமரத் தோட்டம் அமைக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us